நீர்வழிப் படூஉம்
“குற்றம் – மன்னிப்பு – ஏற்றுக்கொள்ளல் என்று இந்நாவல் செல்கிறது. இந்நாவலின் மனிதர்கள் அவர்களின் அத்தனைத் தவறுகளுக்கும் மன்னிக்கப்படுகிறார்கள்; அவர்களின் அத்தனைக் குறைகளோடும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள்; வறுமையும் அலைக்கழிப்பும் தொடர்ந்து விரட்டும் வாழ்வில் தங்களுக்கான ஆசுவாசத்தை நிபந்தனையற்ற மன்னிப்பின் வழியாகவும், எதிர்பார்ப்பற்ற அன்பின் வழியாகவும் தேடிக்கொள்கிறார்கள். நீர்வழிப் படூஉம் புணைபோல் இந்நாவல் அன்பின் வழி சேர்கிறது.” தேவிபாரதி அவர்களின் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் குறித்து எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் பகிர்கிற வார்த்தைகள் இவை. குடிநாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்க்கைப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உள்ளார்ந்த உறவைச் சித்தரிக்கிறது இந்நாவல். தமிழின் சிறந்த நாவல் வரிசையில் நிலைகொள்ளும் இந்நாவல் தன்னறம் நூல்வெளி வாயிலாக இவ்வாண்டு வெளியாகிறது. நொய்யல்கரை மனிதர்களின் வாழ்வுப்புலத்தையும், அவர்தம் உளவியல் சலனங்களையும் அங்குள்ள சமூகப் பின்னணியில் நிறுவி ஆராயும் புனைவுப்போக்கு தேவிபாரதியை தமிழின் முதன்மைப் படைப்பாளிகளில் ஒருவராக இடங்கொள்ளச் செய்கிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக இவரது இலக்கிய மனம் படைத்துக் கொண்டிருக்கிறது. இவருடைய நாவல்கள் இவருக்குரிய இலக்கிய இடத்தை பறைசாற்றவல்லன. அவைகளிலுள்ள வடிவ ஓர்மையும் செறிவான வட்டார மொழிநடையும் புனைவுப்படைப்புகளை ஆழமுறச் செய்கின்றன. “ஒரு படைப்பாளியாக தேவிபாரதியின் இடம் என்பது சென்றகாலத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் மனிதர்களில் மீட்பில்லாது அழிபவர்களின் துயரத்தைச் சொன்னார் என்பதுதான். அதன் வழியாக வரலாற்றில் எளியமனிதர்களின் இடமென்ன என்னும் ஆழமான வினாவை எழுப்புகிறார்.” என தமிழ்.விக்கி இவரைப்பற்றி குறிப்பிடுகிறது.
₹250.00
₹270.00
திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908
கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கியது. துப்பாக்கிச்சூட்டில் நால்வர் மாண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாயினர். மக்கள்மீது திமிர்வரி விதித்த அரசு, ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படையை நிலைநிறுத்தியது. அதற்கு முன்போ பின்போ விடுதலைப் போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம். ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. இந்த எழுச்சியின் நாயகரான வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது இந்நூல். ஆய்வுத் திறமும் அறிவார்ந்த சுவாரசியமும் மிளிர இந்நூலை எழுதியிருக்கிறார் ஆ. இரா. வேங்கடாசலபதி.
₹400.00
Agathiyar Mudhal Vaariyaar Varai
அகத்தியர் முதல் வாரியார் வரை -சித்தர்கள்
₹295.00
₹315.00
திருமூலர் அருளிய திருமந்திரம் 10-ஆம் திருமுறை 3047 மூலப் பாடல்களும் உரையும்
இந்நூலுள்... ஜென்ம சாபல்யம் அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுவதே இந்நூல். முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். இனியும் பிறப்பு வேண்டாம் என்பதற்கு என்ன செய்ய வேண்டும். 'சிவாயநம' என்ற திருவைந்தெழுத்தில்தான் இருக்கிறது சூட்சுமம். அதை விடாமல் பிடித்துக் கொண்டால் மறு பிறவி எடுப்பதிலிருந்து தப்பலாம். 3a சொல்லுங்கள் 'சிவாயநம' என்று. சொல்லிக் கொண்டே இருங்கள். சொல்லச் சொல்ல ஆன்ம பலம் கூடும். அதன் மூலம் சிவமாந்தன்மை அடையலாம். சிவ ஒளியை தரிசிக்கலாம். மறுமையினின்றும் தப்பலாம். ஆனந்தப் பெரு வாழ்வு வாழலாம். எங்கே! சொல்லுங்கள் 'சிவாயநம'
₹770.00
₹1,000.00
திருவாசகம் (மூலமும் உரையும்)
'எட்டாம் திருமுறை' எனப்படும் 'திருவாசகம்' என்னும் இந்நூல் இதுவரை பத்து பதிப்புகள் வெளிவந்து பலராலும் மிகவும் பராட்டப்பட்டுள்ளது. 'திருவாசகத்துக்கு உருகாதர் ஒருவாசகத்திற்கும் உருகார்' என்னும் பழமொழி இஞ்ஞான நூலின் அனுபவ விளக்கமாய் விளங்குகின்றது. ஐம்பத்தொரு திருப்பதிகங்களுடன் திகழ்கிற நூல் இது. பாடல்களின் தொகை அறுநூற்று ஐம்பத்தாறு. மூலமும் உரையுமாக முழுமையான பதிப்பாக வெளியிட்டுள்ளோம். 360 பக்கங்கள், சிறந்த அட்டை பைண்டிங், மிகக் குறைந்த விலை. வாங்கிப் பயனடையுங்கள்.
₹320.00
₹350.00